ரணிலை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு முன் அழைத்த மர்ம நபர்! வெடித்தது சர்ச்சை – அரசியல் ஆய்வாளர் (VIDEO)



இலங்கையின் புதிய ஜனாதிபதி தெரிவு தொடர்பில் இடம்பெற்ற கூட்டமைப்பின் விசேட கூட்டத்தின் போது இந்தியாவின் பெயர் சொல்லக்கூடிய உயர் அதிகாரியொருவர் அழைப்பினை ஏற்படுத்தி ஜனாதிபதி தெரிவு தொடர்பில் தலையிட்டுள்ளமை தவறான விடயம் என அரசியல் ஆய்வாளர் யதீந்திரா தெரிவித்துள்ளார்.

இந்த அழைப்பின் மூலம் சம்பந்தன்,சுமந்திரனின் முடிவை பின்பற்றுமாறு ஏனைய தலைவர்களிடமும் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.இருப்பினும் அழைப்பினை ஏற்படுத்தியவர் தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அரசியல் நகர்வானது தற்போது தங்களது சொந்த விடயங்களுக்காக இந்திய தூதரகத்தையும் சம்பந்தப்படுத்தி அரசியல் ராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,     



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.