முதலில் வரும் 100 பேருக்கு ரூ.199க்கு மொபைல் -திறப்புவிழா சலுகையால் திணறியடித்த கூட்டம்

உசிலம்பட்டியில் பிரபல மொபைல் நிறுவனமான சங்கீதா மொபைல்ஸ்-ன் புதிய கிளை திறப்பு விழா சலுகையாக 199 ரூபாய்க்கு மொபைல் போன் வழங்கப்பட்டதால் அதனை வாங்க நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள மதுரை ரோட்டில் பிரபல மொபைல் விற்பனை நிறுவனமான சங்கீதா மொபைல்ஸ்-ன் புதிய கிளை இன்று திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவை முன்னிட்டு இந்நிறுவனத்தின் சார்பில் முதலில் வரும் 100 பேருக்கு 199 ரூபாய்க்கு மொபைல் போன் வழங்கப்படும் என்ற சலுகை அறிவிக்கப்பட்டு உசிலம்பட்டியின் பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர்கள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டிருத்தது.
image
image
இதனை கண்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கடையின் முன்பு குவிந்தனர். பொதுமக்கள் அதிகம் கூடிய நிலையில் கடையின் சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டு அனைவரையும் வரிசையாக வரும்படி அறிவுறுத்திய நிலையில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கடை ஊழியர்கள் திணறினர்.
image
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய காவலர்களும் கூட்டத்தை சரிசெய்ய முடியாமல் திணறிய சம்பவம் உசிலம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.