கொல்கத்தா: ஆகஸ்ட் 6-ம் தேதி நடக்கும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்தது. எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மார்கரெட் ஆல்வாவை ஆதரிக்க மம்தா பானர்ஜி மறுப்பு தெரிவித்த நிலையில், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை எனவும், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தங்கரை ஆதரிக்க போவதில்லை எனவும் தெரிவித்தார்.