’’அதிமுக எம்.பி.யாக ரவீந்திரநாத்தை கருத வேண்டாம்”- இபிஎஸ் எழுதிய கடிதம்

நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் அதிமுகவில் இல்லை என சுட்டிக்காட்டி, மக்களவை சபாநாயகருக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.
கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட அன்றே ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் ஜெயபிரதீப் உள்ளிட்டோரையும் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பின் அடிப்படையில், ஓ.பி.ரவீந்திரநாத் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் அவர் அதிமுகவில் இல்லை என சுட்டிக்காட்டி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
image
கட்சியிலிருந்து நீக்கியதால் அவரை அதிமுக எம்.பி ஆக கருத வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஓ.பி.ரவீந்திரநாத் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், அதிமுகவின் உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கு, நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் இருப்பதால் இந்த கடிதத்தை ஏற்கக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.