தமிழ்நாட்டில் இன்று 2093 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 516 பேருக்கு பாதிப்பு…

கொரோனா பாதிப்பு காரணமாக கோவையில் இன்று ஒருவர் பலி, இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 38,031 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2093 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 516, செங்கல்பட்டில் 269, திருவள்ளூரில் 104 மற்றும் காஞ்சிபுரத்தில் 75 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவை 178, திருநெல்வேலி 56, தூத்துக்குடி 44, சேலம் 78, கன்னியாகுமரி 44, திருச்சி 47, விழுப்புரம் 40, ஈரோடு 53, ராணிப்பேட்டை 35, தென்காசி 25, மதுரை 48, திருவண்ணாமலை 31, விருதுநகர் 49, கடலூர் 30,

தஞ்சாவூர் 33, திருப்பூர் 28, திண்டுக்கல் 30, தேனி 26, சிவகங்கை 25, புதுக்கோட்டை 23, கிருஷ்ணகிரி 36,

திருவாரூர் 21, பெரம்பலூர் 8, நாமக்கல் 30, கள்ளக்குறிச்சி 10, வேலூர் 11,

தருமபுரி 10, ராமநாதபுரம் 7, மயிலாடுதுறை 18, நீலகிரி 13, நாகப்பட்டினம் 19,

கரூர் 8, அரியலூர் 6, திருப்பத்தூர் 8 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தவிர ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இன்று மொத்தம் 33,899 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 1,232 ஆண்கள் 861 பெண்கள் என மொத்தம் 2,093 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

2,290 பேர் இன்று குணமடைந்த நிலையில் 16,504 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.