புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலில் அசாம் , ம.பி., மஹா., மாநிலங்களை சேர்ந்த எதிர்கட்சி எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் திரவுபதிக்கு ஓட்டளித்து உள்ளனர்.
நாட்டில் 15-வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இந்த போட்டியில்தேசியஜனநாயக கூட்டணி சார்பில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திரவுபதி முர்முவும், ஜக்கியமுற்போக்கு கூட்டணி சார்பில் யஷ்வந்த்சின்ஹாவும் போட்டியிட்டனர். நாடு முழுவதும் இதற்கான தேர்தல் கடந்த 18 ம் தேதி நடைபெற்றது. இன்று (21 ம்தேதி)பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே திரவுபதி முன்னிலை வகித்து வந்தார். தற்போதைய நிலவரப்படி மூன்றாவது சுற்றின் முடிவில் திரவுபதி 812 வாக்குகள் (5,77,777 மதிப்பு ஓட்டுக்கள்), சின்ஹாவுக்கு 521 வாக்குகள் (2,61,062 மதிப்புள்ளஒட்டுக்கள்) கிடைத்து உள்ளது.மேலும் 50 சதவீதத்திற்கும் மேல் ஓட்டுக்கள் கிடைத்துள்ளதால், அவரது வெற்றி வாய்ப்பு உறுதியாகி உள்ளது. இதனையடுத்து யஷ்வந்த் சின்ஹா, திரவுபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனிடையே அசாம் , ம.பி., மஹா., மாநிலங்களை சேர்ந்த எதிர்கட்சியை சேர்ந்த 17 எம்.பி.,க்கள் மற்றும் 104 எம்.எல்.ஏ.க்கள்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement