நாட்டின் 15-வது குடியரசு தலைவராக திரவுபதி முர்மு தேர்வு.. பல்வேறு மாநில முதலமைச்சர்கள் வாழ்த்து.!

குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றி பெற்றுள்ளார்.

இந்தியாவின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து 15வது குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான வாக்குபதிவு கடந்த 18ல் நடந்து முடிந்தது. 

இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில், குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், நாட்டின் 15-வது குடியரசு தலைவராக திரவுபதி முர்மு பொறுப்பேற்க உள்ளார். 

இந்த நிலையில், நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக தேர்வாகியுள்ள திரௌபதி முர்முவுக்கு பல்வேறு மாநில முதலமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் திரவுபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதேபோல் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் புதிதாக தேர்வாகியுள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.