சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிலை கடத்தல்காரர்களுடன் சேர்ந்த இந்துசமய அறநிலையதுறை அதிகாரிகள் மீது போலி வழக்குகள் பதிந்ததாக பொன் மாணிக்கவேல் புகார் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் டிஎஸ்பி காதற் பாட்ஷா தொடர்ந்த வழக்கில் பொன் மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.