மனைவியை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கணவர் – அதிர்ச்சி சம்பவம்!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் அர்சேனா கிராமத்தை சேர்ந்தவர் குஷ்மா. இவரது கணவர் ஷயம்பிஹாரி. இதனிடையே, கணவன் – மனைவி இடையே ஒரு சில விவகாரங்களில் வாக்குவாதம் நிலவி வந்துள்ளது.

இந்நிலையில் மனைவியை மின் கம்பத்தில் கட்டி வைத்து கம்பால் அடித்து க்ஷயம் பிஹாரி துன்புறுத்தியுள்ளார். இந்த சம்பவத்தை வீடியோ பதிவெடுத்த அக்கம் பக்கத்தினர் இணைய தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

சிக்கந்த்ரா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் குமார் ஷாஹி இதுகுறித்து “கடந்த 14ல், ஷ்யாம்பிகாரிக்கும், குஷ்மா தேவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதில், குஷ்மா தேவி தாக்கப்பட்டார். இது குறித்து, குஷ்மா தேவி போலீசில் புகார் அளிக்க முயன்றுள்ளார். இதை அறிந்த குஷ்மாவின் கணவரும், மாமியாரும் அவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர்”. என்று கூறினார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.