கள்ளக்குறிச்சி: பள்ளியில் இருந்து எடுத்துச்சென்ற பொருட்களை திரும்ப ஒப்படைக்கும் மக்கள்

கள்ளக்குறிச்சி பள்ளியில் நடந்த வன்முறையின்போது எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை பொதுமக்கள் திருப்பி ஒப்படைத்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த வன்முறையின்போது பள்ளியில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்களை திரும்ப ஒப்படைக்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்திருந்தது. இதை ஏற்ற பொதுமக்கள் தாங்கள் எடுத்துச் சென்ற பொருட்களை சாலை ஓரங்களில் வீசிச் சென்று வருகின்றனர்.
image
இதில், வாட்டர் பியூரிபயர் மெஷின், மேசைகள், நாற்காலிகள், சிலிண்டர், சமையல் பாத்திரம், ஃபேன், இரும்பு கிரில் கதவுகள் உள்ளிட்ட பொருட்கள் கனியாமூர் மாரியம்மன் கோயில் அருகில் உள்ள பகுதியில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.