காலிமுகத்திடல் பகுதியின் தற்போதைய நிலவரம் (Video)



கொழும்பில் இன்று அதிகாலை காலிமுகத்திடல் பகுதியில் இராணுவம், பொலிஸ் விசேட அதிரடி படையினர் போராட்டப் பகுதிக்குள் பிரவேசித்து போராட்டக்காரர்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

இந்த சம்பவத்தில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததுடன், பலர் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலிமுகத்திடலில் இருந்து திடீரென சென்ற பொலிஸார்! சிறிது நேரத்தில் குவிந்த படையினர் – நேரடி ரிப்போர்ட்

இன்று அதிகாலையில் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது அப்பகுதியில் பல வீதிகளில் வீதித்தடைகள் போடப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட பகுதி முழுமையாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.