பழைய தெம்போடு வந்துள்ளேன் – சென்னை திரும்பிய டி.ராஜேந்தர் பேட்டி

இயக்குனர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் டி.ராஜேந்தர். சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். டி.ராஜேந்தரின் மகனும், நடிகருமான சிம்பு முன்கூட்டியே அமெரிக்கா சென்று அப்பாவின் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று நலமான டி.ராஜேந்தர் அமெரிக்காவில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார். முழுமையாக குணமாகி இன்று அதிகாலை சென்னை திரும்பினார் டி.ராஜேந்தர். அவருக்கு லட்சிய திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர் : ‛‛தமிழ்நாட்டு மக்கள் காட்டிய அன்பு, பிரார்த்தனையின் பலனால் நலமாகி உள்ளேன். இன்றைக்கு அதே பழைய தெம்போடு, உணர்வோடு தாய் மண்ணிற்கு வந்துள்ளேன். அமெரிக்காவில் சிகிச்சை பெற வேண்டும் என என் மகன் சிம்பு வலியுறுத்தியபோது என் தாய் மண்ணான தமிழ்நாட்டிலேயே சிகிச்சை பெறலாம் என்று சொன்னேன். ஆனால் சிம்பு அங்கு தான் போக வேண்டும் என்றார். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற கூற்றுக்கு ஏற்ப அமெரிக்காவில் உயர் சிகிச்சைக்கு சென்றேன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.