மும்பை: நட்சத்திர ஹோட்டலில் ஆர்டரை மாற்றிய வெயிட்டர் – கோபத்தில் குத்திக் கொலை செய்த சமையல்காரர்

மும்பை அந்தேரி கிழக்கு பகுதியில் உள்ள பிவிஆர் சினிமா அருகில் செயல்பட்டு வரும் 3 நட்சத்திர ஹோட்டலில் சமையல்காரராக பணியாற்றுபவர் மாதவ் மண்டல்(27). இதே ஹோட்டலில் ஜெகதீஷ் ஜலால்(42) என்பவர் வெயிட்டராக பணியாற்றி வந்தார். இருவருக்கும் ஜார்க்கண்ட் மாநிலம் ஆகும். நேற்று நள்ளிரவில் வாடிக்கையாளர் ஒருவர் தான் கொடுத்த திடீரென ஆர்டரை மாற்றும்படி கேட்டுக்கொண்டார். இதனால் ஜலால் சமையல்காரர் மாதவிடம் சென்று ஆர்டரை மாற்றும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் மாதவே ஏற்கனவே கொடுத்திருந்த ஆர்டருக்கான உணவை தயாரிக்க ஆரம்பித்திருந்தார். இதனால் உணவு ஆர்டரை மாற்றியதால் மாதவ் கடும் கோபமடைந்தார். அந்த நேரத்தில் எதுவும் சொல்லாமல் இருந்துவிட்டு அதிகாலை ஒரு மணிக்கு பணி முடிந்த பிறகு ஆர்டர் மாற்றியது தொடர்பாக மாதவ் ஜலாலிடம் சண்டையிட்டார்.

மும்பை போலீஸார்

இதனால் அவர்களது நண்பர்கள் தலையிட்டு சமாதானப்படுத்தி வைத்தனர். ஆனாலும் மாதவிற்கு கோபம் அடங்கவில்லை. மீண்டும் காலை 8 மணிக்கு எழுந்தவுடன் மாதவ் மீண்டும் இதே பிரச்னைக்காக ஜலாலிடம் தகராறு செய்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில், மாதவ் சமையல் அறைக்குள் சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து வந்து ஜலாலை சரமாறியாக குத்தினார். இக்கத்திக்குத்தில் ஜலால் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். கொலை செய்துவிட்டு தப்பிச்செல்லாமல் போலீஸாரின் வருகைக்காக மாதவ் ஹோட்டலில் காத்திருந்தார். போலீஸார் தகவல் குறித்து கேள்விப்பட்டு விரைந்து வந்து மாதவை கைது செய்தனர். இது குறித்து அந்த ஹோட்டலில் வேலை செய்த ஊழியர் ஒருவர் கூறுகையில், “இரண்டு பேரும் கடந்த ஒரு ஆண்டாக இந்த ஹோட்டலில் வேலை செய்கின்றனர். அவர்கள் வேலைக்கு சேர்ந்த நாளில் இருந்து அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்” என்று தெரிவித்தார்.

இது குறித்து மாதவிடம் விசாரித்தபோது, “இரவில் அதிகப்படியான ஆர்டர் வந்து கொண்டிருந்தது. இதனால் வேலைப்பளு அதிகமாக மன அழுத்தத்தில் இருந்தேன். அந்த நேரத்தில் திடீரென ஆர்டரை மாற்றியதால் கோபத்தில் இது போன்று செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.