நாடாளுமன்றத்தின் சார்பில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு இன்று பிரிவு உபசார விழா

புது டெல்லி,

இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக 2017-ல் ராம்நாத் கோவிந்த் பொறுப்பேற்றார். அவர் பதவியேற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

அதனால், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு நாடாளுமன்றத்தின் சார்பில் இன்று பிரியாவிடை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, இரு அவைகளின் சபாநாயகர்கள், எம்.பி.க்கள், மத்திய அமைச்சர்கள், உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.

இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு வரும் திங்கட்கிழமை நாட்டின் பதவியேற்றுக் கொள்கிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.