அழுகிய நிலையில் கிணற்றில் கிடந்த இரண்டு ஆண் சடலங்கள் – போலீசார் விசாரணை

விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த 2 ஆண் சடலங்களை மீட்ட போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் பாலமேடு பதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரது விவசாய கிணற்றில் 40 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண் சடலங்கள் அழுகிய நிலையில் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் மல்லசமுத்திரம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்,
image
இதையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர், தீயணைப்பு துறையினரின் உதவியுடன் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இதைத் தொடர்ந்து இறந்தவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.