முதலுதவி சிகிச்சை அளித்த தமிழிசைக்கு பாராட்டு குவிகிறது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: டில்லியில் இருந்து ஐ தராபாத் சென்ற விமானத்தில் பயணி ஒருவர் மயக்கமடைந்தார். அந்த விமானத்திலேயே பயணம் செய்த தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தார். இதற்கு பலர் பாராட்டு தெரிவித்தனர்.

டில்லியில் இருந்து தெலுங்கானா தலைநகர் ஐ தராபாத்திற்கு தனியார் விமானம் சென்றது. அதில், தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசையும் பயணித்தார்.

நடுவானில் விமானம் பயணித்து கொண்டிருந்த போது, அதிகாலை 4 மணியவில், விமான பணிப்பெண் ஒருவர், ‘விமானத்தில் டாக்டர் யாரேனும் உள்ளீர்களா ? பயணி ஒருவர் மயங்கிய நிலையில் உள்ளார்’ எனக்கூறினார். உடனடி தமிழிசை எழுந்து, அந்த பயணி அருகே சென்றார். அவர், வியர்த்த நிலையில் மயங்கிய நிலையில் கிடந்தார். சற்றும் தாமதிக்காமல் அவருக்கு சிகிச்சை அளித்த தமிழிசை, அந்த பயணி கண் விழிக்கும் வரை அருகில் அமர்ந்து பயணித்தார். அந்த பயணி உடல்நிலை சற்று தேறி கண் விழித்ததும் மற்ற பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

latest tamil news

மயக்கமடைந்த அந்த பயணி, ஐதராபாத் சென்றதும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் மயங்கியது குறித்து உடனடியாக தகவல் தெரிவித்த விமான பணிப்பெண்ணுக்கு தமிழிசை பாராட்டு தெரிவித்தார். முதலுதவி சிகிச்சை அளித்த தமிழிசைக்கு பயணிகள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர். தமிழிசை முதலுதவி அளித்ததை படம் பிடித்த சக பயணி ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதை பார்த்தவர்கள், தமிழிசையை பாராட்டி கருத்து பதிவிட்டு வருகின்றனர். தமிழிசை டாக்டருக்கு படித்தவர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.