ஆளில்லா விமானத்தை விரட்டியடித்த ராணுவம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஸ்ரீநகர் : ஜம்மு — காஷ்மீரில் அத்துமீறி நுழைந்த ஆளில்லா விமானத்தை, பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்தனர். ஜம்மு — காஷ்மீரின் எல்லை பகுதியில், பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதும், அவற்றுக்கு நம் ராணுவத்தினர் தக்க பதிலடி தருவதும் தொடர்கிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் பகுதியிலிருந்து, ஆளில்லா விமானம் ஒன்று எல்லை தாண்டி பறந்துள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி, அந்த விமானத்தை விரட்டியடித்தனர். இச்சம்பவத்தையடுத்து, ராணுவத்தினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

latest tamil news

இதற்கிடையே, ஜம்மு – காஷ்மீரின் எல்லைப் பகுதியில் ஊடுருவிய லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஏழு பேரை, பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். மேலும் ஜம்மு, ரஜோரி, கதுவா மற்றும் சம்பா மாவட்ட பகுதிகளில், 20 ஆளில்லா விமானங்கள் வாயிலாக வீசப்பட்ட ஏராளமான ஆயுதங்கள், வெடி மருந்துகள், வெடி பொருட்களையும் கைப்பற்றினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.