கோவிந்த் உரைக்கு பிரதமர் புகழாரம்| Dinamalar

புதுடில்லி: பதவி விலகும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை தேசிய முன்னேற்றத்திற்கான அவரது ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது என பிரதமர் புகழாரம் சூட்டி உள்ளார்.

தற்போதைய ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த் பிரிவு உபரசார உரை நிகழ்த்தினார். அப்போது எந்தவித பேதமும் இன்றி அனைவருக்கும் அடிப்படை வசதி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள் எனவும், 21-ம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்ற நாடு தயாராகி வருகிறது என்பதை உறுதியாக நம்புகிறேன் என தனது உரையில் தெரிவித்தார்.

latest tamil news

ராம்நாத் கோவிந்த் உரை குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் அவரது எழுச்சியூட்டும் உரை தேசிய முன்னேற்றத்திற்கான ஆர்வத்தை தெரிவிக்கிறது. ஜனாதிபதியாக அவர் நாட்டிற்கு சேவை செய்த உணர்வை பிரதிபலி்க்கிறது என புகழாரம் சூட்டினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.