பீகார்: தொழிலதிபரின் வீட்டில் வைத்திருந்த பட்டாசு வெடித்து விபத்து.. 6 பேர் உயிரிழப்பு

பீகாரில் பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள குடாய் பாக் கிராமத்தில் இன்று தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் திடீரென பட்டாசுகள் வெடித்து உள்ளன. பட்டாசுகள் பயங்கரமாக வெடித்துச் சிதறியதால் வீட்டின் பெரும்பகுதி இடிந்து விழுந்தது. இந்த வெடி விபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 8 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். அவர்கள் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

image
பட்டாசு விபத்து குறித்த காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் வீடு, தொழிலதிபர் சபீர் உசைன் என்பவருடையது என தெரிய வந்துள்ளது. வீட்டில் பட்டாசு வெடித்தபோது, வீட்டின் உள்ளே பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளன. வெடிசத்தம் தொடர்ந்து ஒரு மணிநேரம் கேட்டுள்ளது என போலீசார் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து போலீசார் வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. பட்டாசு வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்ததால் குடாய் பாக் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

இதையும் படிக்கலாம்: உக்ரைன் ராணுவ வீரர்களுடன் போரிஸ் ஜான்சன் போர் பயிற்சி!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.