பரபரப்பாக நடந்த டி20 போட்டி – திடீரென வெடித்த குண்டு.. அலறிய மக்கள்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில் குண்டு வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தான் நாட்டில், தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அந்நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்நாட்டு டி20 கிரிக்கெட் லீக் போட்டி நேற்று நடைபெற்றது.

ஷபெஜா டி20 கிரிக்கெட் லீக் தொடரில் நேற்று நடந்த போட்டியில் பெண்ட் – இ அமீர் டிராகன்ஸ் மற்றும் பமீர் ஷல்மி அணிகள் மோதின. இப்போட்டியை உள்ளூர் மக்கள் கண்டுகளித்தனர். மேலும் இந்தப் போட்டியை தாலிபான் அரசின் முக்கிய பிரதிநிதிகளும், ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா. துணை தூதர் ராமிஸ் அலக்பரொவ் உள்பட பல்வேறு நபர்களும் கண்டுகளித்தனர்.

நெருப்புடன் விளையாடாதீங்க..! – அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!

போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது மைதானத்தில் பார்வையாளர்கள் அமர்ந்திருந்த ஓர் அரங்கில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. மைதானத்தில் இருந்த கையெறி குண்டு வெடித்து உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

இந்த குண்டு வெடிப்பு சம்பத்தில் மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் 4 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ். ஹரசன் மாகாணம் பிரிவு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தாலிபான்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.