மயக்கமருந்துக் கொடுத்து ஆசிரியையை பாலியல் வன்கொடுமை; பள்ளி இயக்குநர் கைது – ஆசிரியையை தேடும் போலீஸ்

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்றில் 22 வயது பெண், ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு பள்ளி இயக்குநர் பள்ளி தொடர்பான வேலைகள் இருப்பதாகக் கூறி அந்த ஆசிரியரை அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு மயக்கமருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

அதை வீடியோவாகவும் பதிவு செய்து அவ்வப்போது மிரட்டி மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ய வற்புறுத்தியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த ஆசிரியை, யாருடனும் பேசாமல் மௌனமாக இருந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, அந்த ஆசிரியையின் பெற்றோர் விசாரித்ததில், நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

கைது

ஆசிரியையின் பெற்றோர் குற்றம்சாட்டபட்டவரிடம் தொலைபேசியில் அழைத்து, வன்கொடுமை செய்த போது பதிவுசெய்த வீடியோவை கொடுத்துவிடும்படி கெஞ்சியுள்ளனர். ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர், அலட்சியமாக பதிலளித்ததுடன் மிரட்டியதாக கூறப்படுகிறது. அதற்குப் பின் பாதிக்கப்பட்ட அந்த ஆசிரியை திடீரென மாயமானார். உடனே அந்த ஆசிரியையின் பெற்றோர் ஷாஜஹான்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

காவல்துறை

மேலும், பாலியல் வன்கொடுமை செய்து பதிவாக்கிய வீடியோவையும் கைப்பற்றியிருக்கிறது காவல்துறை. மேலும், ஐபிசி பிரிவு 366 (கடத்தல்), 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஷாஜகான்பூர் எஸ்எஸ்பி ஆனந்த் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட ஆசிரியையை குற்றம்சாட்டப்பட்டவர்கள் தான் கடத்தி சென்றிருக்க வேண்டும் எனப் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். எனவே, அந்த அவரை காவல்துறை தனிப்படை அமைத்துத் தேடி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.