தெரு நாய்களை பிடிக்க திடீர் தடைஅமைச்சர் பிரபு சவுஹான் உத்தரவு| Dinamalar

பெங்களூரு : ”பொது மக்களிடம் இருந்து வந்த கோரிக்கையை அடுத்து, பெங்களூரு நகரில் சுற்றித்திரியும் தெரு நாய்கள், காப்பகத்தில் விடப்படாது,” என கால்நடை துறை அமைச்சர் பிரபு சவுஹான் தெரிவித்தார்.பெங்களூரில் தெரு நாய்கள் தாக்குதலில் பலர் காயமடைந்து வருகின்றனர்.இது தொடர்பாக, பல புகார்கள் வந்தன. இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன் பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளுடன், கால்நடை துறை அமைச்சர் பிரபு சவுஹான் ஆலோசனை நடத்தினார். அதில், பெங்களூரில் தெரு நாய்களை பிடித்து, தனி மையத்தில் அடைக்கப்படும், என முடிவு செய்திருந்தனர்.இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. தெரு நாய்களை பிடித்து, ஒரே இடத்தில் அடைக்க வேண்டாம்.

இங்கேயே இருக்கட்டும்; அதன் பெருக்கத்தை கட்டுப்படுத்தி, ‘ரேபிஸ்’ தடுப்பூசி போடவும், என விருப்பம் தெரிவித்தனர்.இதையடுத்து, கால்நடை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பொது மக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து, தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு வேறு இடத்துக்கு மாற்றப்படாது. அதேவேளையில் நாய்களுக்கு தடுப்பூசி போடப்படும்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.இது குறித்து கால்நடை துறை அமைச்சர் பிரபு சவுஹான் கூறுகையில், ”பொது மக்களிடம் இருந்து வந்த கோரிக்கையை அடுத்து, பெங்களூரு நகரில் சுற்றித்திரியும் தெரு நாய்கள், காப்பகத்தில் விடப்படாது.அவைகளுக்கு தடுப்பூசி, சிகிச்சை, தொற்று தடுப்பூசி போட்டு, அவைகள் இருந்த இடத்திலேயே விட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது,” என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.