டாக்டர் அம்பேத்கர் வளர்ச்சி கழகம்பணிகளை விரைவுபடுத்த உத்தரவு| Dinamalar

பெங்களூரு : டாக்டர் அம்பேத்கர் வளர்ச்சி கழகத்தில், சமூக நலத்துறை அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவுபடுத்தினார்.பெங்களூரு சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா சிக்ககோபுரத்தில் உள்ள டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் வளர்ச்சி கழகத்திற்கு நேற்று காலை சென்ற சமூக நலத்துறை அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அதிகாரிகள், ஊழியர்களின் வருகை பதிவேட்டை பார்வையிட்டார்.சமூக நலத்துறையின் பல வளர்ச்சி பணி செயல்பாடுகளை நேரில் ஆய்வு செய்து, அதை மேலும் விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.’நில உரிமை திட்டம் மற்றும் கங்கா கல்யாண் திட்டத்தின் மின் மயமாக்கல் ஆகியவற்றில் உள்ள குழப்பத்தை தீர்க்க விரைவான நடவடிக்கை எடுக்குமாறு, கழக நிர்வாக இயக்குனர் சுரேஷ் குமாருக்கு அறிவுறுத்தினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.