இந்தியாவில் புதிதாக 19,637 பேருக்கு கோவிட்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,637 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,637 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,40,19,811 ஆனது.
கடந்த 24மணி நேரத்தில் 19,336 பேர் நலமடைந்து வீடு திரும்பினர்.தற்போது 1,43,676 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கோவிட் காரணமாக 45 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,26,357ஆக உயர்ந்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.