யூடியூப் பார்த்து ஒயின் தயாரித்த சிறுவன்..! – காவல்துறை சொல்வது என்ன ..?

யூடியூப் பார்த்து சிறுவன் ஒருவன் கேரளாவில் ஒயின் தயாரித்துள்ளான். யூடியூபில் பார்த்து செய்முறைகளை கொண்டு அந்த சிறுவன் தயாரித்துள்ளான். பாட்டிலில் திராட்சைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட அந்த ஒயினை மண்ணில் புதைத்து பின்னர் அதை எடுத்து தனது நண்பனுக்கும் குடிக்க கொடுத்துள்ளான்.

அதை குடித்த அந்த சிறுவனின் நண்பனுக்கு உடல் சோர்வும் வாந்தியும் ஏற்பட்டதாக மருத்துவமனை கூறுகிறது. தாமாக முன் வந்து விசாரணை மேற்கொண்டது கேரள காவல்துறை, அப்போது சிறுவன் தயாரித்த ஒயினை கைப்பற்றி அதை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். பரிசோதிக்கப்பட்ட ஒயினில் ஆல்கஹால் அல்லது வேறு ஏதேனும் கலப்படம் செய்யப்பட்டு இருந்தால் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அந்த சிறுவனிடம் விசாரித்தபோது யூட்யூப் பார்த்துதான் ஒயின் தயாரித்ததாகவும் அதை குடிக்க தனது நண்பனுக்கு கொடுத்ததாகவும் விசாரணையில் அச்சிறுவன் தெரிவித்துள்ளான். இதைக் கேட்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். ஒயினில் வேறு எந்த பொருளும் சேர்க்கவில்லை என அச்சிறுவன் கூறி உள்ளான். இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.