ஜனாதிபதிக்கு பாகிஸ்தான் ஜனாதிபதியிடமிருந்து வாழ்த்து

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு, பாகிஸ்தான் ஜனாதிபதி கலாநிதி அரீப் அல்வி (Arif Alvi) அவர்கள் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அவர்களுக்கு இன்று, (01) விசேட வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி அவர்கள், இரு நாடுகளுக்கிடையில் நிலவுகின்ற உறவை இரு நாட்டினதும் முன்னேற்றத்திற்காக மேலும் வலுப்படுத்துவதே தமது எதிர்பார்ப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையின் கீழ், இலங்கை தற்போதுள்ள பொருளாதார சவால்களை வெற்றிகொள்ளும் எனக் குறிப்பிட்டுள்ள அரீப் அல்வி அவர்கள், எதிர்காலத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்தி, மிக நெருக்கமாக செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

01.08.2022

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.