தேசிய கல்வி கொள்கைக்காக பள்ளிகளில் சிறப்பு வசதிகள்| Dinamalar

பெங்களூரு, : அடுத்த ஆண்டிலிருந்து, தேசிய கல்வி கொள்கை செயல்படுத்தப்படும். இதற்கு தகுந்தபடி, அரசு பள்ளிகளில் வசதி செய்யப்படுகிறது,” என கலால்துறை அமைச்சர் கோபாலய்யா தெரிவித்தார்.பெங்களூரில், நேற்று அவர் கூறியதாவது:மஹாலட்சுமி லே — அவுட் சட்டசபை தொகுதியில், பல இடங்களில் 50 கோடி ரூபாய் செலவில், டில்லி போன்று பப்ளிக் பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன.

இந்த பள்ளிகளில், அதிநவீன ஆய்வகம், நுாலகம், கணினி லேப்கள் உள்ளன. தனியார் பள்ளிகளுக்கு, எந்த வகையிலும் குறைவில்லாதபடி, உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு மாணவர்கள் அட்மிஷன் பெற போட்டி போடுகின்றனர்.அடுத்த ஆண்டிலிருந்து, தேசிய கல்வி கொள்கை செயல்படுத்தப்படும். திட்டத்தின் கீழ், குருபரஹள்ளி உட்பட அனைத்து பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, ஊழியர்கள் என, தேவையான வசதிகள் செய்யப்படும். இது, மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.