கன்னியாகுமரி: கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.