மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து… 10 பேர் பலி!

மத்தியப் பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் பிரபல தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களில் தீ மளமளவென பரவியது.

இதனையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் தீயில் சிக்கி நோயாளிகள் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தீ முதலில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் பற்றி பிறகு மற்ற பகுதிகளுக்கு பரவியதாகவும் போலீசார் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படை வீரர்கள் பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீயில் சிக்கி படுகாயமடைந்த 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.