வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை மீண்டும் அதிகரிப்பு

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஜூலை மாதத்தில் சுமார் 43,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின், சுற்றுலா ஹோட்டல்களின் மின் பிறப்பாக்கிகள் உள்ளிட்ட பிற தேவைகளுக்கும் எரிபொருளை வழங்கும் முறை தற்போது நடைமுறையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இம்மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.