குருதி ஆட்டத்திற்கு அதர்வா தான் காரணம்: இயக்குனர் நெகிழ்ச்சி

ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் படம் குருதி ஆட்டம். 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா முரளி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ளது. ஆகஸ்ட் 5 ம் தேதி வெளியாகிறது.

படம் பற்றி இயக்குனர் ஶ்ரீகணேஷ் கூறியதாவது: இந்த படத்தின் மூலம் எங்களுக்கு மிகப்பெரிய பயணம் கிடைத்தது. தயாரிப்பாளர் என்னுடன் ஆரம்பம் முதல் முடிவு வரை உறுதுணையாக இருந்தார். எனது முதல் படம் முடித்தவுடன் அதர்வா என்னை நம்பி என்னுடன் படம் பண்ண ஒத்துகொண்டார். இந்த திரைப்படத்தின் திரைக்கதையில் மிகப்பெரிய உதவியாய் இருந்தவர் அதர்வா. என் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை குருதி ஆட்டம் காப்பாற்றும். இந்த திரைப்படம் பல தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அறிமுக திரைப்படம், அவர்கள் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்தின் நடிகர்கள் பலருக்கு இந்த படத்தின் மூலம் பெரிய வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். இது ஒரு உணர்வுபூர்வமான கதையாக இருக்கும். என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.