கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகே பவானி ஆற்றின் குறுக்கே கொடிவேரி அணை வருகிறது. அங்கிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், கொடிவேரி அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் நேற்றுமுன்தினம் இரவு விடிய விடிய கனமழை கொட்டியதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கொடிவேரி அணையில் இருந்து 2,000 கனஅடி நீர் வெளியேற தொடங்கியது. இதனால், சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.