பாக்.கில் உயரதிகாரிகளுடன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் மாயம்| Dinamalar

பலுசிஸ்தான்: பாகிஸ்தானில் உயர் அதிகாரிகளுடன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் திடீரென மாமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் லாஸ்பெல்லாவிலிருந்து சில உயர் அதிகாரிகளுடன் ராணுவ ஹெ லிகாப்டர் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் திடீரென மாயமானது. சுமார் 5 மணி நேரமாக தேடியும் ஹெலிகாப்டர் இருக்குமிடத்திற்கான சிக்னல் கிடைக்கவில்லை.

ஹெலிகாப்டரில் 6 காமாண்டர்கள் 6 வீரர்கள் என 12 பேர் பயணித்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹெ லிகாப்டரை தேடும் பணி நடப்பதாக கூறப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.