புதுடில்லி: சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளு மன்றத்தில் கத்திரிக்காயை பச்சையாக கடித்து காட்டிய மம்தா கட்சி பெண் எம்.பி.யால் சலசலப்பு ஏற்பட்டது.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரானது, அமளியுடன் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வரும் நிலையில் நேற்று விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடந்தது.
தொடக்கம் முதல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் கூடிய நிலையில், அமளி ஓயாததால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று நடந்த விவாதத்தின் போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி ‘ககோலி கோஷ் தஸ்திதர் பேச துவங்கினார்.
அவர் பேசுகையில், கடந்த சில மாதங்களில் வீட்டு பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.600லிருந்து இப்போது ரூ.1,100 ஆக அதிகரித்துவிட்டது.” கடந்த ஓராண்டில் 8வது முறை உயர்த்தப்பட்டுள்ளது. இப்படியே விலை ஏறி கொண்டே போனால், காய்கறிகளை பச்சை சாப்பிட வேண்டும் என இந்த அரசு வலியுறுத்துகிறதா என்றார். பின் திடீரென ஒரு கத்திரிக்காயை எடுத்து கடித்து காண்பித்தார்.. அவரது செயல் சக எம்.பிக்கள் மட்டுமல்லாது பா.ஜ., எம்.பிக்களிடையேயும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement