சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை கால்நடை உணவு உற்பத்திக்காக பயன்படுத்தியதாகக்கூறப்படும் இ குருநாகல் கீனகஸ்பிட்டிய பிரதேசத்தில் இயங்கி வரும் கால்நடை உணவு உற்பத்தி நிறுவனமொன்றை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.
அங்கு இருந்து 3இ057 மெட்ரிக் தொன் அரிசியை அதிகாரிகள் கைப்பற்றியதாக வர்த்தகஇ வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் எதிர்வரும் 5ஆம் திகதி குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் குருநாகல் மாவட்டப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் கால்நடை உணவு உற்பத்திக்காக அரிசி பயன்படுத்துவதை தடை செய்துஇ கடந்த ஜூன் மாதம் 24 ஆம் திகதி நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது..