பிரித்தானியாவை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் முக்கிய திருப்பம்: சொந்த நாட்டவரின் கொடுஞ்செயல்


பிரித்தானியாவில் பட்டப்பகலில் நடந்த 9 வயது சிறுமி விவகாரத்தில் பழம் பறிக்கும் பணி செய்துவரும் இளைஞர் ஒருவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை, பட்டப்பகலில் தெருவில் தமது 5 வயது சகோதரியுடன் விளையாடிக்கொண்டிருந்த 9 வயது லிதுவேனிய சிறுமி Lillia Valutyte கொடூரமாக தாக்கப்பட்டார்.

இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்த சிறுமி, பரிதாபமாக மரணமடைந்தார். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 22 வயது Deividas Skebas மீது நேற்றிரவு விசாரணைக்கு பின்னர் கொலை வழக்கு பதியப்பட்டது.

பிரித்தானியாவை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் முக்கிய திருப்பம்: சொந்த நாட்டவரின் கொடுஞ்செயல் | Deividas Skebas Charged Murdering Lilia Valutyte

பாஸ்டனில் குடியிருந்து வந்த லிதுவேனிய நாட்டவரான ஸ்கெபாஸ் இன்று லிங்கன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
விசாரணை முன்னெடுக்கப்பட்ட இரண்டு நிமிடங்களில் பெரும்பகுதியை அவர் தலையைக் குனிந்து கண்களை மூடிக்கொண்டு தனது பெயர், பிறந்த திகதி மற்றும் முகவரியை உறுதிப்படுத்த மட்டுமே பேசினார்.

இதனையடுத்து இன்று பிற்பகல் லிங்கன் கிரவுன் நீதிமன்றத்தில் ஸ்கெபாஸ் ஆஜர்படுத்தப்பட்டார், அங்கு அவர் காவலில் வைக்கப்பட்டார்.

பிரித்தானியாவை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் முக்கிய திருப்பம்: சொந்த நாட்டவரின் கொடுஞ்செயல் | Deividas Skebas Charged Murdering Lilia Valutyte

இந்த வழக்கின் விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 19ம் திகதி துவங்கும் என்றே கூறப்படுகிறது.
பொலிசார் தெரிவிக்கையில், இந்த தாக்குதல் சம்பவமானது பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.

பிரித்தானியாவை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் முக்கிய திருப்பம்: சொந்த நாட்டவரின் கொடுஞ்செயல் | Deividas Skebas Charged Murdering Lilia Valutyte



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.