அதிர்ச்சி! கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்து கொண்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தியாகதுருகம் அருகே கூவாடு கிராமத்தை சேர்ந்த பெரியநாயகம் என்ற பெண்ணுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கருத்தரித்த அவர் கருக்கலைப்பு செய்வதற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து அவருக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது. அதன்பிறகு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து   உறவினர்கள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Death

தகவல் அறிந்து வந்த போலீஸார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைத்து சென்றனர். பெரியநாயகியின் உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

கருக்கலைப்பு செய்வதற்காக மருத்துவமனைக்கு வந்த  பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.