மர்மநபர்கள் வீடுபுகுந்து கடத்திய 23 வயது இளம்பெண்ணை பத்திரமாக மீட்ட போலீசார்.!

மயிலாடுதுறையில் மர்மநபர்கள் வீடுபுகுந்து கடத்திய 23 வயது இளம்பெண்ணை போலீசார் மீட்டனர். விக்னேஸ்வரன் என்பவர், தனது பாட்டி வீடருகே வசித்த அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

புகாரின் பேரில் விக்னேஸ்வரனை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்றிரவு பெண்ணின் வீட்டிற்குள் கூட்டாளிகள் 15 பேருடன் புகுந்த விக்னேஸ்வரன் அவரை வலுக்கட்டாயமாக கடத்தி ஸ்கார்பியோ காரில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

மயிலாடுதுறை போலீசார் அளித்த தகவலின் பேரில், விக்ரவாண்டி டோல்கேட் அருகே விக்னேஸ்வரன் உள்பட்ட 3 பேரை மடக்கி பிடித்த போலீசார், பெண்ணை மீட்டனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.