டெல்லி :பல்கலை., கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் அக்.31க்குள் பாதியிலேயே வெளியேறினால் முழு கட்டணத்தையும் திருப்பி தர உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு இவ்வாறு ஆணையிட்டுள்ளது. சேர்க்கையை ரத்து செய்தால் மாணவர்கள் செலுத்திய அனைத்துக் கட்டணத்தையும் திருப்பி தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.