செஸ் ஓலிம்பியாட் தொடரில் ஸ்பெயின் வீரர் ஜெய்மிடம் தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார்.
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் செல்லப் பிள்ளையாக பார்க்கப்படும் இந்திய பி அணி வீரர் பிரக்ஞானந்தா. இவர் இத்தாலி வீரர் லாரன்சோ லிடிசியை எதிர்கொண்டார். இந்த போட்டி 42 வது நகர்வில் டிராவில் முடிந்தது. இந்நிலையில் ஸ்பெயின் வீரர் ஜெயிமை அவர் எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா 85வது நகர்த்தலில் ஸ்பெயின் வீரர் ஜெய்மிடம் தோல்வியடைந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil