2 மாத தடைக்கு பின் கடலுக்கு சென்ற படகுகள்| Dinamalar

மங்களூரு : மீன்கள் இன பெருக்கத்தால் இரண்டு மாதமாக நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடி தொழில், நேற்று முதல் மீண்டும் துவங்கியது.வழக்கமாக ஜூன், ஜூலையில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும். இந்நேரத்தில் மீன் பிடிக்க, மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.இரண்டு மாத கால தடை நீக்கப்பட்டதை அடுத்து, நேற்று மீனவர்கள் ஒன்று கூடி, பூஜை செய்தனர்.

பின், அனைவரும் கடலுக்குள் மீன் பிடிக்க ஆர்வமுடன் சென்றனர்.மீனவர் சங்கத்தினர் கூறுகையில், ”டீசல் விலை உயர்த்தப்பட்டதால் பெரும்பாலான படகுகள், மே மாதமே இயக்குவதை நிறுத்திவிட்டன. ”தற்போது டீசல் விலை குறைந்துள்ளதால், படகு இயக்கத்தை நிறுத்தியவர்களும் நேற்று மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். ”மங்களூரு துறைமுகத்தில் 1,400 இழுவை படகுகள்; மால்பே, கங்கோலியில் 2,166 இழுவை படகுகளும் உள்ளன,” என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.