சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள இயலும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு செக் குடியரசுத் தலைவர் வாழ்த்து.

தற்போது இலங்கை எதிர்கொள்ளும் சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க வேண்டும் என்று தாம் பிரார்த்திப்பதாக செக் குடியரசின் ஜனாதிபதி மைலோஸ் சீமன், (Milos Zeman) அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ள Milos Zeman அவர்கள், அனுபவமிக்க தலைவராக அவர் சவால்களை வெற்றிகரமாக முறியடிப்பார் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

செக் குடியரசும் இலங்கையும் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் நெருங்கிய நட்பை அனுபவித்து வருகின்றன. அந்த சிறப்பான நல்லுறவை இரு நாட்டு மக்களின் நலனுக்காக தொடர்ந்தும் ஆழமாகே மேம்படுத்த எதிர்பார்ப்பதாகவும் செக் குடியரசுத் தலைவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2022-08-09

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.