சாலை விபத்து: மீன்பிடித் திருவிழாவிற்கு வந்த இருவருக்கு நேர்ந்த பரிதாபம்

நத்தம் அருகே காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஒத்தகடை என்ற இடத்தில் வி.எஸ்.கோட்டையில் இருந்து நத்தம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. மறுமார்க்கத்தில் கோபால்பட்டி அருகே கன்னிpயாபுரத்தில் நடைபெறும் மீன்பிடி திருவிழாவிற்கு இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்தனர்.
image
அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருச்சக்கர வாகனத்தில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் ஒருவர் படுகாயத்துடன் நத்தம் மருத்தவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாணார்பட்டி போலீசார், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.