ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணைத்த 55 லட்சம் பேர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், ஆதார் எண்ணுடன் 55 லட்சம் பேர் வாக்காளர் அடையாள அட்டையை இணைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

நாடு முழுவதும் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் முயற்சியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதற்கான அனுமதியை வழங்கி உள்ள தேர்தல் ஆணையம், ஆக., 1 முதல் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநில தேர்தல் அதிகாரி பிரவீன் குப்தா கூறுகையில், நாடு முழுவதும் 2.52 லட்சம் பேர் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்கப்பட்டுள்ளது. அதில், ராஜஸ்தானில் மட்டும் 55.86 லட்சம் பேர் இணைத்துள்ளனர். இதனை செய்வதற்காக கடந்த 9 ம் தேதி மட்டும் 12. 24 லட்சம் பேர் விண்ணப்பம் செய்தனர். மக்கள் தாமாக முன்வந்து ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

latest tamil news

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.