மைசூரு : குடும்ப தகராறில் தந்தையை கொன்று நாடகமாடிய மகனை போலீசார் கைது செய்தனர்.மைசூரில் உள்ள பிருந்தாவன் காலனியை சேர்ந்தவர் சம்பத்குமார், 45; ரியல் எஸ்டேட் தொழிலுடன், அகர்பத்தி வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் மனைவி இல்லாத நேரத்தில் கொலை செய்யப்பட்டார்.அப்போது வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த அவரது 16 வயது மகன், தன் தந்தையை யாரோ கட்டையால் அடித்து கொன்று விட்டனர்
என கூறி அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். பின் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார், உடலை மீட்டு விசாரித்தனர். முதலில் ரியல் எஸ்டேட் விவகாரத்தில், யாராவது கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதினர். மகனிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், கொலை நடந்த நேரத்தில் யாரும் சம்பத் குமார் வீட்டுக்கு செல்லவும் இல்லை; வெளியில் வரவும் இல்லை என்பது தெரியவந்தது.இதனால் போலீசார், நேற்று மகனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், தந்தையை கொலை செய்ததை ஒப்பு கொண்டார்.போலீசாரிடம் அவர் மேலும் கூறியதாவது:தன் தந்தை தினமும் வீட்டில் தேவையில்லாத காரணத்துக்கு எல்லாம் சண்டை போட்டு வந்துள்ளார். நேற்று முன் தினமும் தாய் வெளியில் சென்றிருந்த நேரத்தில், தன்னிடம் தந்தை தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரத்தில் கட்டையால் அடித்து கொலை செய்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.இதையடுத்து, மகனை போலீசார் கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement