ஓ.பன்னீர்செல்வத்திற்கு சசிகலா ஓகே – 'இரட்டை இலை'க்கு பக்கா ஸ்கெட்ச்!

அதிமுக பிளவுக்கு பின்னணியில் திமுக காரணமாக இருக்கலாம் என, வி.கே.சசிகலா குற்றம் சாட்டி உள்ளார்.

அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.மாயத்தேவர் வயது மூப்பு காரணமாக நேற்று இயற்கை எய்தினார். அவரது உடல் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடலுக்கு அதிமுக, திமுக, அமமுக, மதிமுக, உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் கட்சி பாகுபாடின்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் மறைந்த மாயத்தேவர் உடலுக்கு

நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் சசிகலா கூறியதாவது:

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் முதல் முறையாகப் போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றவர் மாயத்தேவர். அவரது மறைவு பெரும் இழப்பு. முதல் அதிமுக வெற்றி என்பது இவர் முலம் தான் கிடைத்தது.

அதிமுக என்பது தனிப்பட்ட ஒரு நபருக்கானது அல்ல; எம்ஜிஆர் அவர்கள் கட்சி ஆரம்பிக்கும் போதே அதிமுக கட்சி ஏழைகளுக்கானது தான் என்று சொல்லி இருந்தார்.

அதிமுகவை பொறுத்தவரை பொதுச் செயலாளரை தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதிமுகவின் தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள். அது தான் உண்மை. உண்மையை நோக்கி தான் இந்த இயக்கம் செல்லும். நிச்சயமாக வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவை வெற்றி பெற செய்வேன். அதை எல்லோரும் பார்க்க தான் போகிறார்கள்.

நான் சிறையில் இருந்து வெளியே வந்ததிலிருந்து, அதிமுகவிலிருந்து யார் தனித்தனியே பிரிந்து இருக்கிறார்களோ, அவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதை என் நோக்கமாக உள்ளது. எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவும் செய்யும் கடமையாக இதை நான் நினைக்கிறேன். இதை நான் நிச்சயம் செய்வேன்.

நான் 40 வருட காலமாக, இந்த இயக்கத்தில் இருந்திருக்கிறேன். அனைத்து அரசியல் சூழல்களையும் பார்த்து தான் வந்துள்ளேன். அதிமுக பிளவுபட்டு உள்ளதால், யாருக்கு உடனடியாக ஆதாயம் கிடைக்கும் என்றால், அது நிச்சயம் திமுகவிற்கு மட்டுமே தான். தற்போது அதிமுக பிளவிற்கு திமுக தான் பின்னணியில் உள்ளது என நான் நினைக்கிறேன்.

ஓபிஎஸ் மட்டுமல்ல அதிமுகவில் இருந்து யாரெல்லாம் பிரிந்து இருக்கிறார்களோ அவர்கள் அனைவரையும் மீண்டும் அதிமுகவில் இணைப்பது தான் என் வேலை. அதை நான் நிச்சயம் செய்து வருகிற 2024 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவை வெற்றி அடைய செய்வேன். கட்சி சின்னத்தை எவ்வாறு மீட்கிறேன் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.