காஞ்சிபுரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் குப்பைநல்லூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக உத்திரமேரூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலையடுத்து போலீசார் குப்பைநல்லூர் பகுதியில் தீவிர கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது அப்பகுதியில் இருந்த விக்னேஷ்(21) என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை செய்ததில், அவர் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து விக்னேஷை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.