18,800 லீட்டர் டீசலுடன் நால்வர் கைது

அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக எடுத்து செல்லப்பட்ட 18 ஆயிரத்து 800 லீட்டர் டீசலுடன் 4 பேரை ஹம்பாந்தோட்டை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (10) அதிகாலை 2 மணியளவில் ஹம்பாந்தோட்டை ஸ்ரீபோபுர பகுதிகளில் இதுதொடர்பான முற்றுகை மேற்கொள்ளப்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உப்பு ஏற்றி செல்ல பயன்படும் பாரிய லொறி ஒன்றும், மீனை எடுத்து செல்ல பயன்படுத்தப்படும் குளிரூட்டப்பட்ட 2 லொறிகளை பயன்படுத்தி நீரை நிரப்புவதற்காக பயன்படுத்தப்படும் தாங்கிகளில் இந்த டீசல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அம்பாந்தோட்டை தலைமை பொலிஸ் நிலையம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.