டெல்லி: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக அரசும், தமிழக மக்களும் சிறப்பாக நடத்தினர் என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும் உலகை வரவேற்று, நமது சிறந்த கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலை வெளிப்படுத்தியதற்காக பாராட்ட விரும்புகிறேன் என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.