விருது தொகை ரூ.10 லட்சத்தை முதலமைச்சர் நிவராண நிதிக்கு வழங்கினார் “தகைசால் தமிழர்” நல்லகண்ணு 

சென்னை: விருதுக்கான பத்து லட்சம் ரூபாயுடன் தனது சொந்த நிதி ரூ. 5 ஆயிரம் சேர்த்து 10 லட்சத்தி 5 ஆயிரத்தை முதலமைச்சர் நிவராண நிதிக்கு வழங்கினார் “தகைசால் தமிழர்” நல்லகண்ணு

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது 2021-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி இந்தாண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவிற்கு “தகைசால் தமிழர் விருது” வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் “தகைசால் தமிழர்” விருதை ஆர்.நல்லகண்ணுவிற்கு வழங்கினார்.

மேலும் இந்த விருதுக்கான பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நல்லகன்ணுவிற்கு வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பத்து லட்சம் ரூபாயுடன் தனது சொந்த நிதி ரூ.5 ஆயிரம் சேர்த்து 10 லட்சத்தி 5 ஆயிரம் ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு முதல்வரிடம் வழங்கினார் நல்லகண்ணு.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.